Monday, January 23, 2012

என் காதல் சொல்ல வார்த்தை உண்டு..


  • தமிழ்த் திரையிசைப் பாடல்களில் பல கவிஞர்களால் பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்பட்ட பாடல்..
  • திருமண அழைப்பிதழ்களில் பலரும் அச்சிட்டு மகிழ்ந்த பாடல்..
  • படித்தவர் முதல் பாமரர் வரை பலருக்கும் அறிமுகமான ஒரு பாடல்..
  • தமிழ் செம்மொழி என்பதற்கான சான்று பகரும் பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடல்..

என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட ஒரு பாடல்...


யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40)


என்ற பாடலாகும்.

எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கவே தோன்றுகிறது.
அப்படி என்னதான் இந்தப் பாடலில் இருக்கிறது?

தொன்மையா?
இனிமையா?
எளிமையா?
தனித்தன்மையா?
உவமையா?

இல்லை. இவையாவற்றையும் கடந்து வேறு ஏதோ இந்தப்பாடலில் இருக்கிறது.
ஒருவேளை உயிர்..!!
அது சங்கப்பாடல்களுக்கே உரிய பொது அடையாளமாயிற்றே..
அதையும் தாண்டி... 
வேறு ஏதோ ஒன்று..

மக்கள் கூட்டமாக இருந்தாலும் உயரமான ஆளை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா? 
சிரித்த முகத்துடன் இருப்பவர் பளிச்சென்று தெரிந்திடுவார் இல்லையா?அதுபோல..

இந்த சங்கபாடலையும் எளிதில் கண்டுகொள்ளமுடிகிறதே..

ன் காதல் சொல்ல வார்த்தையில்லை என்று புலம்பும் காதலர்கள் நடுவே...
காதல் கவிதை எழுதும் கவிஞர்களின் நடுவே..

இதுதான் என்காதல் என்று மிக எளிமையாக சொல்லிச் சென்ற அந்தப் பண்புதான் இந்தப் பாடலை தனிச்சிறப்புடைய பாடலாக வேறுபடுத்திக்காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது.

குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான்.

என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்?
நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்?
செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன.

இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று.


இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகளே இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன.


தொடர்புடைய இடுகைகள்.

22 மறு மொழிகள்:

  1. அருமையான குறுந்தொகைப் பாடல். விளக்கம் அருமையிலும் அருமை. ஒரு சிறு வேண்டுகோள். பின்புலத்தில் பூமி படமோ வேறு எந்த வால்பேப்பரும் வைக்க வேண்டாம். என்னைப் போல ஸ்லோ கனெக்சன் இன்டெர்நடட் உள்ளவர்கள் அணுக கடினமாக உள்ளது. பழையபடியே எளிமையாக தளத்தை அமையுஙகள். இதன் காரணமாக தங்களது சில இடுகைகளை என்னால் அணுக முடியாமல் போய்விட்டது. தவறிருந்தால் மன்னிக்கவும்.
    தமஓ 2.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பரே அறிவுறுத்தலுக்கு நன்றி.

      Delete
  2. பள்ளிக் காலங்களில் அறிமுகமான இப்பாடல்...
    கல்லூரிக் காலங்களில் தேசிய கீதம் போல இருந்தது...
    ஒரு பருவத்தில் காதல் கவிதைகள் கொந்தளித்து வருகையில்
    அதிக நம்பிக்க ஊட்டிய பாடல் இதுவே...
    அழகான ஒரு சங்கப் பாடலை நீங்கள் விளக்கிய முறை நன்று முனைவரே...

    ReplyDelete
    Replies
    1. உண்மையே மகிழ்ச்சி நண்பரே

      Delete
  3. உங்களின் விளக்கம் பாடலைப் போல மிகவும் அருமை ! நன்றி Sir!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பரே

      Delete
  4. மிக நல்ல இடுகை. வாழ்த்துகள். எனக்கும் பல நேரங்களில் தங்கள் வலைக்கு வரமுடியாமல் இருந்தது. ஏனென்று யோசித்தேன்.இப்போது புரிகிறது.
    வேதா. இலங்காதிலகம்.
    httP://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி திலகம்

      Delete
  5. தமிழின் இலக்கிய சிறப்பை சொல்லும்
    நல்ல பணி தங்களுடையது!

    ///செம்புலப் பெயல் நீர் போல\\\\

    ஆம் மிகச்சிறந்த உவமை இது

    என் கல்லூரி தமிழாசிரியர்கள் நினைவுக்கு வந்தனர்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி நண்பா

      Delete
  6. எத்தனை அழகான வரிகள்.அற்புதம் !

    ReplyDelete
  7. நல்ல ரசனையான பாடல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விச்சு

      Delete
  8. அருமையான பதிவு நண்பரே..

    ReplyDelete
  9. பலமுறை ரசித்த பாடல்தான் .ஆனாலும்,முனைவரால் விளக்கப்படும்போது சுவை கூடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அன்பரே

      Delete
  10. படிக்கும் போதே காதல் அரும்புகிறது வரிகளின் மேல் ..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அரசன்

      Delete
  11. என் வேண்டுகோளை ஏற்று தளத்தை எளிமையாக மாற்றியதற்கு மிக்க நன்றி நண்பரே!இப்போது எளிதில் தளத்தை அணுக முடிகிறது!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி அன்பரே

      Delete

இலக்கியத் திரட்டி

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (130) அன்றும் இன்றும் (39) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (55) இயற்கை (23) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (65) எதிர்பாராத பதில்கள் (14) ஐங்குறுநூறு (2) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (2) கதை (21) கருத்தரங்க அறிவிப்பு (8) கலித்தொகை (11) கலீல் கிப்ரான். (8) கலை (5) கவிதை (30) காசியானந்தன் நறுக்குகள் (15) காணொளி (8) கால நிர்வாகம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (38) குறுந்தொகை (71) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (20) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (17) சங்க இலக்கியத்தில் உவமை (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (26) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (10) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (15) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (2) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (18) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (9) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (3) சிந்தனைகள் (129) சிறப்பு இடுகை (5) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (1) தமிழர் பண்பாடு (10) தமிழாய்வுக் கட்டுரைகள் (14) தமிழின் சிறப்பு (22) தமிழ் அறிஞர்கள் (5) தமிழ்ச்சொல் அறிவோம் (6) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (5) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (21) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (2) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (92) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (45) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (5) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (11) புறநானூறு (68) புவிவெப்பமயமாதல் (5) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) மனதில் நின்ற நினைவுகள் (18) மனிதம் (2) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (6) மாணாக்கர் நகைச்சுவை (26) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (39) வேடிக்கை மனிதர்கள் (68) வைரமுத்து (5)