Friday, January 6, 2012

பயணம் இது பந்தயமல்ல..



சாலை விபத்துக்களைப் பார்க்கும்போது பதறும் மனசு. சாலைவிதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்களைக் கண்டால் கோபம் கொள்கிறது...

ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது..
இவர்களை நாம் திருத்த முடியாது நாம் நம்மைத் திருத்திக்கொள்வதுதான் ஒரே வழி என்று..

நேற்று நண்பர்களுடன் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன்..
எங்களைக் கடந்து சென்ற ஊர்தியில் பின்னே...

“பயணம் இது பந்தயம் அல்ல“ என்று எழுதியிருந்தது.

என் நண்பரிடம் நான் சொன்னேன்..

எவ்வளவு அருமையாக விழிப்புணர்வளிக்கும்விதமாக எழுதியிருக்குன்னு பாருங்க என்றேன்..

அவர் சொன்னார்... உண்மைதான் ஆனால் அப்படி எழுதிவிட்டு அவன் ஏன் இவ்வளவு வேகமாக நம்மை முந்திக்கொண்டு பந்தயம் போலச் செல்கிறான் என்றார்..

இன்னொரு நண்பர்...

ஐயா இந்த விழிப்புணர்வு வாசகங்கள் எல்லாம் அவங்களுக்காக எழுதப்பட்டதல்ல..

பின்னால் வருபவர்களுக்கு மட்டுமே...

நம்மைப் போன்றவர்கள் பார்த்துப் படித்து விழிப்போடு நடந்துகொள்ளவேண்டும் என்பதற்குதான் எழுதப்பட்டிருக்கிறது என்றார்.

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில் நடந்த நிகழ்வு தான் நினைவுக்கு வருகிறது..

அவர் ஒருமுறை விழாவுக்குச் செல்லும்போது காலதாமதமானதால் அவரின் ஓட்டுநர் விரைவாக ஊர்தியைச் செலுத்தினார். அப்போது கவிஞர் கேட்டார்...

ஏம்பா இவ்வளவு வேகமாப் போற என்று..

ஓட்டுநர் சொன்னார் ஐயா இவ்வளவு வேகமாச் சென்றால்தான் விழாவுக்கு சரியான நேரத்தில் கலந்துகொள்ளமுடியும் என்று..

அதற்கு கவிஞர்...

பத்து நிமிடம் காலதாமதமாகச் செல்லலாம்
பத்து வருடம் முன்னாடியே போயிடக்கூடாது..

அதனால் மெதுவாவே போ என்றாராம்..


தொடர்புடைய இடுகை

15 மறு மொழிகள்:

  1. சாலைப் பாதுகாப்பு வார சிறப்புப் பதிவு அருமை
    குறிப்பாக கவியரசு அவர்கள் சொன்ன வாசகம்
    அனைவரும் மனதில் இருத்திக்கொள்ளவேண்டிய ஒன்று
    அனைவருக்குமான எச்சரிக்கைப் பதிவு அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  2. Kannadhasan vaarthaigal marakka mudiyatha varigal. Azhagaana Pathivu Munaivare!

    ReplyDelete
  3. வணக்கம்.
    பாதுகாப்பில் நாம் கருத்தாய் இருப்பதே நல்லது.

    ReplyDelete
  4. சாலை பாதுகாப்பு அப்படின்னா என்ன அப்படின்னு கேட்குற ஆளுங்கதான் அதிகம் இங்க...பதிவுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. பத்து நிமிடம் காலதாமதமாகச் செல்லலாம்
    பத்து வருடம் முன்னாடியே போயிடக்கூடாது..
    >>
    நச்சுன்னு சொல்லி இருக்கார். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. மக்கள், வாகன தொகைக்கு ஏற்ப சாலைகள் அதன் தரம் இல்லாவிடில் விபத்துக்கள் தவிர்க்க முடியாது

    ReplyDelete
  7. விழிப்புணர்வு பதிவு.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  8. காலத்திற்கேற்ற பதிவு..கவிஞரின் குறும்பான கவிதை சிறப்பு..கடை பிடிப்போம்..

    ReplyDelete
  9. அருமையான பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  10. மறக்க முடியாத வரிகள்;
    ''பத்து நிமிடம் காலதாமதமாகச் செல்லலாம்
    பத்து வருடம் முன்னாடியே போயிடக்கூடாது..''
    மறக்கக் கூடாத வரிகளும்
    சாலை பாதுகாப்பு வாரத்தை நினைவில் கொண்டு இதை எழுதியமைக்கு பாராட்டும் நன்றியும்

    ReplyDelete
  11. வாகனப்பந்தயத்தில் முந்தநினைத்து கண்மூடித்தனமான வேகம் காட்டினால் வாழ்க்கைப் பந்தயத்திலும் முந்திக்கொண்டு கண்மூடவேண்டியதுதான். கவிஞர் உரைத்தது சாலச் சரி. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. நன்றி முனைவரே.

    ReplyDelete
  12. நன்றி இரமணி ஐயா
    நன்றி டேனியல் ஐயா
    நன்றி அப்பு
    நன்றி கோவை நேரம்

    ReplyDelete
  13. நன்றி இராஜி
    நன்றி கவியழகன்
    நன்றி நண்டு
    நன்றி மதுமதி

    ReplyDelete
  14. நன்றி கவிப்பிரியன்
    நன்றி நாயகம்
    நன்றி கீதா

    ReplyDelete
  15. nalla karuththukku
    nantri!

    ReplyDelete

இலக்கியத் திரட்டி

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (130) அன்றும் இன்றும் (39) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (55) இயற்கை (23) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (65) எதிர்பாராத பதில்கள் (14) ஐங்குறுநூறு (2) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (2) கதை (21) கருத்தரங்க அறிவிப்பு (8) கலித்தொகை (11) கலீல் கிப்ரான். (8) கலை (5) கவிதை (30) காசியானந்தன் நறுக்குகள் (15) காணொளி (8) கால நிர்வாகம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (38) குறுந்தொகை (71) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (20) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (17) சங்க இலக்கியத்தில் உவமை (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (26) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (10) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (15) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (2) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (18) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (9) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (3) சிந்தனைகள் (129) சிறப்பு இடுகை (5) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (1) தமிழர் பண்பாடு (10) தமிழாய்வுக் கட்டுரைகள் (14) தமிழின் சிறப்பு (22) தமிழ் அறிஞர்கள் (5) தமிழ்ச்சொல் அறிவோம் (6) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (5) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (21) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (2) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (92) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (45) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (5) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (11) புறநானூறு (68) புவிவெப்பமயமாதல் (5) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) மனதில் நின்ற நினைவுகள் (18) மனிதம் (2) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (6) மாணாக்கர் நகைச்சுவை (26) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (39) வேடிக்கை மனிதர்கள் (68) வைரமுத்து (5)