Tuesday, November 1, 2011

மறைபொருள் தெரிகிறதா..?

ழை, பணக்காரன்
அறிவாளி, முட்டாள்
உயர்ந்தவன், தாழ்ந்தவன்

என எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்குமான காரணத்தை வாழ்க்கை மறைத்து ஐந்து இரும்புக் கதவுகளுக்குள் வைத்துப் பூட்டிவைத்திருக்கிறது.

இந்தக் கதவைத் திறந்து பார்த்தவர்கள் மட்டுமே திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள்!

வியாபாரியின் பார்வைபட்ட பின் 
குப்பை கூட பணமாகிவிடுகிறது!

குட்டிக்கரணம் போடுவதால்
குரங்கு கூடத் திரும்பிப்பார்க்கப்படுகிறது!

முன்னோருக்கு உணவுபடைக்க
காக்கை கூட அதன்மொழியில் அழைக்கப்படுகிறது!

கடையில் லாபம் பெறுக
கழுதைகூட நிழற்படமாகிவிடுகிறது!

இப்படி உயிரற்ற, உயிருள்ள இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றும்..
ஏதோ புரிந்துகொண்டிருக்கின்றன..


இல்லையென்றால்..


நமக்கு ஏதோ புரியவைக்க முயற்சிக்கின்றன.

விலைமதிப்பில்லாத
இந்த இயற்கைக் கூறுகள் கூட
தேவை, தனித்தன்மை காரணமாக

விலை மதிக்க முடியாதவையாக ஆவிடுகின்றன!

விலை மதிக்கமுடியாத மனிதன் மட்டும்
தன்னை உணர்ந்துகொள்ளாததால்
விலை மதிப்பே இல்லாதவனாகிவிடுகிறான்!!

அதனால்..

கொம்பை மறந்த மாடுபோல
துயர வண்டி இழுக்கிறான்!

மந்தையில் பிரிந்த ஆடுபோல
திருதிருவென விழிக்கிறான்!

தாயின்றி அழும் குழந்தைபோல
அழுது தவிக்கிறான்!

வாழ்க்கையின் மறைபொருளை அறிந்துகொள்ள மனிதன் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல....

எத்தனையோ பேர் வாழ்க்கையின் இந்த மறைபொருளை அறிந்து, உணர்ந்து சாதித்திருக்கிறார்கள்..

இன்னொருவன் உண்பதால் நம் பசி தீராது!!

நாமே உழைப்போம்..

உடலால் உழைத்து உழைத்து மாடாகியது போதும்!!
அறிவால் உழைத்து உலகாளுவோம்!!


இதோ மறைபொருள் திறக்க ஐந்து திறவுகோல்கள்!


1. நான் ஏன் பிறந்தேன்?

2. என் தனித்தன்மை என்ன?

3. நான் ஏன் இப்படி இருக்கிறேன்?

4. நான் ஏன் இவர்களோடு இருக்கிறேன்?

5. நான் ஏன் இன்னொருவர் சென்ற பாதையில் செல்லவேண்டும்?

இந்தக் கேள்விகளே நான் உங்களுக்குத் தரும் திறவுகோல்கள்!!


என்ன நண்பர்களே மறைபொருள் தெரிகிறதா..??


தொடர்புடைய இடுகைகள்






சங்ககாலக் கல்வி நிலை.

ன்றைய சூழலில் கல்வியின் பரப்பு எந்த அளவுக்குஅதிகரித்துள்ளதோ..
அந்த அளவுக்கு அறியாமையின் பரப்பும் விரிவடைந்துள்ளது!

கடவுள் – பேய் – ஆவி – பிசாசு – மூடநம்பிக்கைகள் ஆகியன இன்னும் தானே நம்மிடம் உள்ளன..

சிந்தித்தபோது...
கல்வி மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது!
ணம் குறித்து சிந்தித்தபோது..
கல்வி மனிதனை விலங்காக்கியது!

குடும்பச் சூழல், வறுமை, அறியாமை எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்..
கல்வி கற்போர் விழுக்காடு இன்னும் ஏற்றத்தாழ்வுடனேயே இருந்துவருகிறது.

கல்வி வணிகமாகிவிட்ட இந்தச் சூழலில் கல்வி கற்று அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் கல்விச்சாலைகளில் சேர்வதில்லை..

கல்வி பணம் ஈட்டும் ஒரு தொழில் என்ற எண்ணத்திலேயே பலரும் முதலீடு செய்கின்றனர்..

கல்வி குறித்த இதுபோன்ற பல சிந்தனைகள் நமக்கிருந்தாலும்..
சங்ககாலத்தில் கல்வி குறித்த சிந்தனை எவ்வாறு இருந்தது என்று காண்பதாக இவ்விடுகை அமைகிறது..

இச்சூழலிலும்..
“கல்விச் சிறப்புடையவனையே குடும்பம், அரசு, சமூகம் மதிக்கும்“ என்பதை வலியுறுத்தும் பாடல் ஒன்று..


ம் ஆசிரியருக்கு ஒரு துன்பம் வந்தபோது உடன் சென்று அதனைத் தீர்ப்பதற்குத் துணைநிற்க வேண்டும்.
மிகுதியான பொருளை அவருக்குக் கொடுத்தாவது கல்வி கற்றல் வேண்டும்.
வரை வழிபடுவதற்கு வெறுப்படையக் கூடாது..
இவ்வாறெல்லாம் செய்து ஒருவன் எப்படியாவது கல்வி கற்கவேண்டும்.

ல்வி கற்றல் அவ்வளவு நன்மை தரக்கூடியதாகும்.மேலும்..
ரு தாய் வயிற்றில் பிறந்த இருவருள்ளும் அந்தத் தாய்
மூத்தவனை விட கல்வி கற்றிருந்தால் இளையவன் மீது பற்றுடையவளாக இருப்பாள்.அதுமட்டுமின்றி.. 
ரு குடியில் பிறந்த பலருள்ளும் மூத்தவனை வருக என்று அழைக்காமல் அவருள்ளே அறிவுடையோனையே வருக வருக என்று அழைத்து அரசனும் அவன் காட்டும் வழியில் நடப்பான்.

வேற்றுமை தெரிந்த கீழ்க்குல மக்களுள் ஒருவன் கற்று வல்லவனாயின் மேற்குலத்துள் ஒருவனும்  இவன் கீழ்க்குலத்தான் என்று எண்ணாமல் கல்வியின் பொருட்டு அவனிடம் சென்று வழிபட்டு வேண்டி நிற்பான். அதனால் எவ்வகையில் பார்த்தாலும் கல்வி சிறப்புடையதாகும்.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே" 
(புறம்-183)

திணை – பொதுவியல்
துறை – பொருண்மொழிக்காஞ்சி
பாடியவர் – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.
உயிருக்கு உறுதி தரும் பொருளான கல்வியால் வரும் சிறப்புக்களை உரைப்பதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.


பாடல் வழியே..
1. போருக்கு முன்னுரிமை தந்த சங்ககாலத்திலேயே கல்விக்கும் அவர்கள் முன்னுரிமை தந்தார்கள் என்பது புலனாகிறது.
2. மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பர். அதுபோல இப்பாடல் பாடிய மன்னனின் சிந்தனை சங்ககாலக் கல்வி நிலையைப் படம்பிடித்துக்காட்டுவதாக உள்ளது.
3. குடும்பம், அரசு, சமூகம் என மூன்று நிலைகளிலும் மதிப்புப் பெற வேண்டுமானால் கல்வி கற்கவேண்டும் என்ற சங்ககால சிந்தனை இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது.
4. கற்றுத் தரும் குருவுக்குத் தரவேண்டிய மதிப்பை இப்பாடல் அழகாகப் பதிவு செய்துள்ளது.


தொடர்புடைய இடுகைகள்..






இலக்கியத் திரட்டி