நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!
மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!
கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!
வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!
மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!
மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!
நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..
தமிழ் உறவுகளே நான் வாங்கிய பட்டங்களெல்லாம் எனக்கு வேலை மட்டுமே வாங்கிக்கொடுத்தன..
இயற்கைதான் எனக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்தது..
450 வது இடுகை வெளியிடும் இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளில் வருகைதரும் அன்பு உறவுகளே “இயற்கையைப் பாதுகாப்போம்“ என்னும் சிந்தனையை முன்வைத்து..
நான் விரும்பி எழுதிய சில இயற்கை சார்ந்த இடுகைகளைத் தங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்...
3. சந்தன மரம்
7. இயற்கைக்கும் மனிதனுக்கும் 20/20
தங்கள் தொடர் வருகைக்கும்,
வாசித்தலுக்கும்,
புரிதலுக்கும்,
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும்,
ஆற்றுப்படுத்தலுக்கும்,
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!
தங்கள் தொடர் வருகைக்கும்,
வாசித்தலுக்கும்,
புரிதலுக்கும்,
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும்,
ஆற்றுப்படுத்தலுக்கும்,
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!
