Wednesday, June 1, 2011

எதுக்காகப் பொருள் தேடறீங்க..?


பொருள் தான் வாழ்க்கையின் அடித்தளம்.
பொருள் இல்லாதவரை இந்த உலகில் நாய் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லை!
அதனால் தான் எல்லோருமே பொருள் தேடுகிறோம்.

நாம் தேடும் பொருள் யாருக்காக..?

தனக்கு!
தன் குடும்பத்துக்கு!!
அடுத்து வரும் தன் தலைமுறைக்கு!!!
அடுத்தடுத்து வரும் தன் தலைமுறைகளுக்கு!!!!


என்ற பதிலே பெரும்பாலோனரிடமிருந்து வரும்.
சரி! இதுதானே சராசரி மனித வாழ்க்கை!

இதையும் தாண்டி சிந்தித்தவர்கள் தான் மாமனிதர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதோ சங்ககாலத் தலைவன் ஒருவனுடைய சிந்தனை.

“தம்மை விரும்பி வாழ்வோருக்கு உதவி செய்து அவர்களைக் காத்தலால் வரும் மகிழ்ச்சி ஒன்று,
தாம் விரும்பும் சுற்றத்தாருடன் கூடிக்கலந்து இன்புறும் மகிழ்சி மற்றொன்று.

இவ்விரண்டு மகிழ்ச்சிகளின் திறவுகோல் பொருள்!
அதனால் பொருளைத் தேடவேண்டும் என ஓயாமல் நினைந்தான் தலைவன்.“

தன் குடும்பத்தின் வறுமை நீங்கவேண்டுமே என்று எண்ணவேண்டி தலைவன்,
விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவி செய்யப் பொருள்வேண்டுமே என்று எண்ணுகிறான்.

தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் கலந்திருப்பதால் தானோ சங்ககாலத்தைப் பொற்காலம் என்கிறோம்.

பாடல் இதோ..

தம் நயந்து உறைவோர்த் தாங்கி தாம் நயந்து
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ
நகுதல் ஆற்றார்நல்கூர்ந்தோர்! என
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆபமன் வாழி தோழி கால் விரிபு
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
கலைமான் தலையின் முதல் முதற் கவர்த்த
கோடல் அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சலி
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள்
அரிக் கோற் பறையின் ஐயென ஒலிக்கும்
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை்ப பொருந்தி செல்லுநர்க்கு
உறுவது கூறும் சிறு செந் நாவின்
மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய் பல்லிய காடு இறந்தோரே!

அகநானூறு 151
பாலை
காவன் முல்லைப் பூதரத்தனார்.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

ஆடுகளப் பறை

தோழி..
வாழ்க! பாலை நிலத்தில் குட்டையான வாகைமரங்கள் கோடைக்காற்றில் உலர்ந்து மிகுதியான காற்று வீசும்போது,கூத்தியர் ஆடும் போது முழங்கும் பறைபோல, அவற்றின் விளைந்த நெற்றுகள் ஒலிக்கும்.

பல்லி சோதிடம்

அங்கு கற்குவியலில் கள்ளிச் செடிகள் நிற்கும்.
பல்லி, சோதிடன் போல அவ்வழியே செல்வோருக்கெல்லாம் நிமித்தம் கூறும்.
அத்தகைய காட்டைக் கடந்து சென்ற நம் தலைவர் முன்பு நம்மிடம் அருளோடு இருந்தார்.

ஈத்துவக்கும் இன்பம்

இப்போது தம்மை விரும்பி இருப்போரை ஆதரித்து!
தாம் விரும்பும் உறவுகளுடன் இயைந்து மகிழ்ந்திருக்க இயலாதவொரு வறுமையுற்றார். அதனால் வாழ்க்கைக்குச் செல்வமே துணையாகும் என்று நினைந்து நம்மிடம் அருள்கூர்வதைக் கைவிட்டார். வறுமையை நீக்கும் பொருள் மகிழ்வைத் தரவல்லது. விருந்தினரையும், சுற்றத்தாரையும் மகிழச் செய்வது.
“அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் தோன்றும் இன்பமானது,
இன்பங்களுள் தலைசிறந்தது.“ என்று உணர்ந்தவராக என்னை நீங்கிப் பொருள் நாடிச் சென்றார்!
நாம் என்ன செய்யமுடியும்..? என்கிறாள் தலைவி.

பாடல் வழியே.
1. விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவுவதே இல்லற வாழ்வின் அடிப்படைக் கடமை என்பது உணர்த்தப்படுகிறது.
2. பறையொலிக்கு ஏற்ப ஆடுகளமகள் (கூத்தியர்)ஆடும் வழக்கம் சுட்டப்படுகிறது.
3. சங்ககாலம் தொட்டே பல்லியின் ஒலியை, மக்கள் நிமித்தமாகக் கருதியமை உணரமுடிகிறது.

(பொருள் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்மல்ல -
தங்கள் மேற்பார்வைக்கு “துபாயா அபுதாபியா?)

8 மறு மொழிகள்:

  1. ஏற்க்கனவே ஒருமுறை தங்களிடம் கூறியிருந்தேன் "என் பள்ளிப்பருவத்தில் வந்த எங்கள் தமிழய்யா புலவர் சின்னமாடசாமி அவர்களே வந்து புறநானுற்று பாடல் நடத்தியது போலிருந்தது!!!நண்பரே "அதே நிகழ்வே என் கண் முன் தோன்றுகிறது நண்பரே ..
    நன்றி

    ReplyDelete
  2. தன்னலத்தோடு பொதுநலச் சிந்தனையும் கலந்திருப்பதால் தானோ சங்ககாலத்தைப் பொற்காலம் என்கிறோம்.//
    Nice.

    ReplyDelete
  3. சங்ககாலத்தின் பழக்கவழக்கங்களை அருமையாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்!!அருமையான தகவல்கள் அனைத்தும்...உண்மையாகவே பொற்காலம் தான்....

    ReplyDelete
  4. இன்றைய எனது இடுக்கையில் இது குறித்து நானும் பதிவிட்டுளேன்

    ReplyDelete
  5. //விருந்தினருக்கும், சுற்றத்தாருக்கும் உதவி செய்யப் பொருள்வேண்டுமே என்று எண்ணுகிறான்.//

    நல்ல பொதுநல நோக்கு கொண்டவன். அவன் தான் மனிதன்.

    ReplyDelete
  6. பதிவு எப்பவும் போல அருமை

    ReplyDelete
  7. மகிழ்ச்சி மருதா
    நன்றி இராஜேஷ்வரி
    நன்றி இராஜா
    மகிழ்ச்சி சுடர்விழி
    கண்டேன் சர்புதின் நன்று
    தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி கோபால கிருஷ்ணன் ஐயா
    நன்றி சசி.

    ReplyDelete

இலக்கியத் திரட்டி

அகப்பொருள்.

1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (1) 100வது இடுகை. (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (37) அகநானூறு (20) அனுபவம் (125) அன்றும் இன்றும் (37) அறிவிப்பு (1) ஆசிரியர்தினம். (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (54) இயற்கை (22) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் (2) ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010 (1) உயிருள்ளபெயர்கள் (எனது நூல்) (1) உளவியல் (65) எதிர்பாராத பதில்கள் (14) ஐங்குறுநூறு (2) ஒலிக்கோப்புகள் (1) ஓவியம் (2) கதை (21) கருத்தரங்க அறிவிப்பு (8) கலித்தொகை (11) கலீல் கிப்ரான். (8) கலை (5) கவிதை (31) காசியானந்தன் நறுக்குகள் (15) காணொளி (8) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (38) குறுந்தொகை (69) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (20) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (17) சங்க இலக்கியத்தில் உவமை (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (25) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (10) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (7) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (4) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (15) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (2) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (18) சங்கத்தமிழர் அறிவியல் (23) சமூகம் (9) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (3) சிந்தனைகள் (130) சிறப்பு இடுகை (5) சிறுபாணாற்றுப்படை (1) சென் கதைகள் (1) தமிழர் பண்பாடு (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (14) தமிழின் சிறப்பு (22) தமிழ் அறிஞர்கள் (5) தமிழ்ச்சொல் அறிவோம் (6) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) திருக்குறள் (19) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (1) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொன்மம் (1) தொல்காப்பியம் (2) தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை முழுவதும் (1) தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.. (1) தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை..... (1) நகைச்சுவை (92) நட்சத்திர இடுகை (3) நற்றிணை (45) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிற்றுப்பத்து (1) பழமொழி (5) பாராட்டுவிழா (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) பிள்ளைத்தமிழ் (1) புதிர் (2) புறத்துறைகள் (11) புறநானூறு (68) புவிவெப்பமயமாதல் (5) பெண்களும் மலரணிதலும் (2) பெரும்பாணாற்றுப்படை (4) மனதில் நின்ற நினைவுகள் (17) மனிதம் (2) மலைபடுகடாம் (1) மாணவர் படைப்பு (6) மாணாக்கர் நகைச்சுவை (26) முத்தொள்ளாயிரம் (1) யாப்பு (1) யுடியுப் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (37) வேடிக்கை மனிதர்கள் (66) வைரமுத்து (5)