
○ பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியிடம்….
இந்தியக் காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவருவது எனக்குப் பெரும் வருத்தமாகவுள்ளது என்றார்.
அதற்கு, காந்தி….
“உண்மைதான். உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை. விலங்குகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போதுதான் எனக்கு இன்னும் வருத்தமாகவுள்ளது“ என்றார்.

○ அலெக்சாண்டரின் குரு அரிஸ்டாட்டில். அலெக்சாண்டர் வெற்றிமேல் வெற்றியாகக் குவித்துக்கொண்டிருந்ததை அவ்வப்போது தன் குருவுக்குத் தெரிவித்துவந்தார்.
அலெக்சாண்டரிடம் அரிஸ்டாட்டில் சொன்னார்..
அலெக்சாண்டர் நாடுபிடிப்பது உனது இலக்கு!
அந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பிடிப்பது எனது இலக்கு!
எனவே நீ பிடிக்கும் நாடுகளின் அறிஞர்கள் எழுதிய ஏடுகளை நான் படிக்க ஏற்பாடு செய்..
என்றார்.

○ சர்ச்சிலின் 80 வது வயது நிறைவுக்காக நடந்த விருந்தில் நிழற்படம் எடுக்கவந்த இளைஞன் சர்ச்சிலிடம்,
ஐயா உங்களது 100 வது ஆண்டு நிறைவுவிழாவிற்கும் நான் தான் நிழற்படம் எடுக்கவேண்டும் என விரும்புகிறேன்.. என்றான்.
உடனே சர்ச்சில்…………
“நண்பா கவலையை விடு…
உன்னைப் பார்த்தால் நல்ல உடல்நலம் உள்ளவனாகத் தான் தெரிகிறாய். அந்த வாய்ப்பு உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று சொன்னார்.
○ எம்பிடேகல் என்பவர் ஒரு தத்துவஞானி. அவரைச் சந்தித்த இளைஞன்……...
நான் பெரிய அறிவாளிகளுடன் பேசிப் பழகிப் பழகி பெரிய அறிவாளியாகிவிட்டேன் என்று சொன்னான்.
அதற்கு அந்த ஞானி………..
“நானும் தான் பெரிய பெரிய பணக்காரர்களுடன் பேசிப் பழகிவருகிறேன் ஆனால் என்னால் பணக்காரனாகமுடியவில்லையே“ என்று சொன்னார்.
○ பிரபல குத்துச்சண்டை வீரர் ஜோலூயியிடம் ஒருவர்…
நீங்கள் இதுவரை சந்தித்த சண்டைகளிலேயே உங்களை அதிகமாக சிரமப்படுத்தியவர் யார்? என்று கேட்டார்..
அதற்கு அந்த குத்துச்சண்டை வீரர்……..
“வருமான வரி அதிகாரி“ என்று அமைதியாகச் சொன்னார்.