வகுப்பில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் போது ஒரு கருத்தை எடுத்துச்சொல்வதற்காக மாணாக்கர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
உங்கள் கையில் ஒருலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டேன். இந்தப் பணத்தை வெச்சு உங்க வீட்டை நிறைவாக்க வேண்டும் அதற்கு என்ன செய்வீர்கள் ?
என்று கேட்டேன்.
மாணவன்-1 - வீடு முழுக்க மண்ணைக் கொட்டி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-2- வீடு முழுக்க குப்பையைக் கொட்டி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-3 - வீடு முழுக்க பொருள்களை வாங்கி நிறைத்துவிடுவேன்.
மாணவன்-4- நானே பணம் முழுவதையும் வைத்துக்கொள்வேன். வீட்டுக்கு ஒன்றும் செய்ய மாட்டேன். ஏனென்றால் வீடே காற்றால் தானே நிறைந்திருக்கிறது என்றான் ஒரு மாணவன்.
இப்படி எதிர்பாராத பதிலளித்துத் திகைக்கச் செய்தான் அந்த மாணவன்.
சரி கதைக்கு வருவோம்..
இப்படித்தான் ஒருமுறை தர்மனுக்கும், துரியோதனனுக்கும் போட்டி வைத்தார்களாம்..
துரியோதனன் தன்னிடமிருந்த பணத்துக்கு வீடு முழுக்க வைக்கோலை வாங்கி நிறைத்துவிட்டானாம்..
தர்மனோ ஒரு சிறிய விளக்கேற்றி வைத்தானாம். வீடு முழுக்க ஒளியால் நிறைந்ததாம்..
உளவியல் உண்மை.
வீடு என்பது மனம்..
வீட்டில் நிறைப்பதாக மாணவர்கள் சொன்னது அவர்கள் மனம் முழுக்க நிரம்பியிருப்பது என்பதை அவர்களுக்கு உணரச்செய்தேன்..
சரி இப்ப சொல்லுங்க..
இந்தப் பணத்தை வெச்சு நீங்க என்ன செய்வீங்க?